மலையக எழுச்சி பயணத்தின் 3 ஆம் நாள் நடைபயணம் மன்னாரில் நிறைவு

#SriLanka #Mannar #Event #Lanka4
Kanimoli
2 years ago
மலையக எழுச்சி பயணத்தின் 3 ஆம் நாள் நடைபயணம் மன்னாரில் நிறைவு

மலையக எழுச்சி பயணத்தின் மூன்றாவது நாளான இன்று (30) பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் ஆரம்பமான எழுச்சிப் பயணம் மன்னாரை வந்தடைந்தது. . மூன்றாவது நாளான இன்று ஞாயிற்றுக்கிழமை (30) காலை 6.30 மணியளவில் பேசாலை வெற்றிநாயகி ஆலயத்தில் சர்வமத தலைவர்களின் ஆசியுடன் எழுச்சிப் பயணம் மன்னார் நகரை நோக்கி ஆரம்பமானது.

images/content-image/1690705562.jpg

 இதன் போது மன்னார் மறைமாவட்ட ஆயர் மேதகு இம்மானுவேல் பெர்னாண்டோ ஆண்டகை அங்கு சென்று ஆசி வழங்கிய நிலையில் மன்னார் நகர் நோக்கி அவர்களின் எழுச்சி நடை பயணம் ஆரம்பமானது. காலை 11 மணியளவில் மன்னார் நகரை வந்தடைந்து மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதயத்தை சென்றடைந்தனர். இதன் போது மன்னார் கறிற்றாஸ் வாழ்வுதய இயக்குனர் அருட்தந்தை எஸ்.அன்ரன் அடிகளார் மற்றும் பணியாளர்கள் இணைந்து வரவேற்றனர்.

 நாளை திங்கட்கிழமை (31) காலை 6.30 மணியளவில் மன்னாரில் இருந்து நான்காவது நாள் பயணமாக முருங்கன் நோக்கி பயணிக்க உள்ளனர். மலையக மக்களின் 200 வருட கால வரலாற்றை நினைவு கூறும் வகையிலும்,மலையக மக்களின் மாண்பை பறைசாற்றும் விதமாகவும் 'வேர்களை மீட்டு உரிமை வென்றிட' என்ற தொனிப்பொருளில் 'மலையக எழுச்சிப் பயணம்' என்ற மகுடத்தில் மாண்புமிகு மலையக மக்கள் கூட்டிணைவால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 16 நாள் தொடர் நடை பயணத்தின் ஆரம்ப நிகழ்வுகள் கடந்த வெள்ளிக்கிழமை (28) தலைமன்னாரில் அமைந்துள்ள புனித லோரன்ஸ் திருத்தலம் முன்பு நடைபெற்றது.

images/content-image/1690705578.jpg

 அதன் தொடர்ச்சியாக இரண்டாம் நாளான நேற்று சனிக்கிழமை காலை 6.30 மணியளவில் தலைமன்னார் புனித லோரன்ஸ் திருத்தலத்தில் இருந்து ஆரம்பமான நடைபயணம், காலை 11 மணியளவில் பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்தை வந்தடைந்தது.

 மலையக மக்கள்,மலையகத்தை பிரதிநிதித்துவப்படுத்தும் சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், ஏனைய சிவில் சமூக அமைப்புகளின் பிரதிநிதிகள், தலைமன்னார் மற்றும் பேசாலை நகரை அண்மித்து வாழும் மக்களின் பங்கேற்புடன் வெற்றிநாயகி தேவாலயத்தை வந்தடைந்த பேரணியை அத் தேவாலயத்தின் அருட்தந்தை வரவேற்றதோடு அதனைத் தொடர்ந்து வழிபாடுகள் இடம்பெற்றன

images/content-image/1690705591.jpg

இந்நிலையில் மூன்றாம் நாளான இன்றைய தினம் ஞாயிற்றுக்கிழமை (30) காலை 6.30 மணியளவில் மீண்டும் பேசாலை வெற்றிநாயகி தேவாலயத்துக்கு அண்மையில் இருந்து ஆரம்பமாகிய நடைபயணம் மன்னார் நகரை வந்தடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!