யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் வாள்வெட்டு!
#SriLanka
#Jaffna
#Lanka4
Thamilini
2 years ago
யாழ்ப்பாணம் - திருநெல்வேலி பகுதியில் நேற்று (29.07) இடம்பெற்ற வாள்வெட்டு தாக்குதல் சம்பவத்தில், பல்கலைக்கழக மாணவர் ஒருவர் காயமடைந்துள்ளார்.
மோட்டார் சைக்கிளில் முகத்தை மூடியவாறு வருகை தந்த நால்வர் குறித்த தாக்குதலை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தாக்குதல் சம்பவத்தின்போது வீட்டின் தளபாட பொருட்களுக்கு சேதம் ஏற்பட்டுள்ளதாக வீட்டின் உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.