காலாவதியான பொருட்களை விற்பனை செய்த நிறுவனம் முற்றுகை!
அவுஸ்திரேலியாவில் இருந்து ஆன்லைன் மூலம் ஆர்டர்களை பெற்றுக்கொண்டு இலங்கையில் உலர் உணவுகளை விநியோகிக்கும் நிறுவனமொன்றை நுகர்வோர் சேவை அதிகாரசபை அதிகாரிகள் சோதனையிட்டுள்ளனர்.
கடந்த (28) ஆம் திகதி பிற்பகல் இந்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது. அங்கு காலாவதியான சில பொருட்களை கண்டறிந்த அதிகாரிகள் அந்த பொருட்களுக்கு சீல் வைத்துள்ளனர்.
சட்ட விதிமுறைகள் இன்றி பொருட்களை விற்பனை செய்ததால், மேற்படி நடவடிக்கை எடுக்கப்பட்டதாக கூறப்படுகிறது.
வாடிக்கையாளர் சேவை அதிகாரசபை அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் துறைமுகத்திற்கு அருகில் உள்ள இடத்தில் இந்த சோதனை நடத்தப்பட்டுள்ளது.
விசாரணையின் போது, அவுஸ்திரேலியாவில் உள்ள இலங்கையர்கள் தொடர்பான பொருட்கள், அவர்கள் வழங்கிய கட்டளைகளின் அடிப்படையில் இந்த நிறுவனத்தால் இந்த நாட்டில் உள்ள அவர்களின் வாடிக்கையாளர்களுக்கு விநியோகிக்கப்படுவது முதலில் கண்டுபிடிக்கப்பட்டது.
அதன்படி, சம்பந்தப்பட்ட இடத்தை ஆய்வு செய்த வாடிக்கையாளர் சேவை அதிகாரசபையின் அதிகாரிகள், சம்பந்தப்பட்ட இடத்தில் காலாவதியான பல தேயிலை துாள் பொட்டலங்களை கண்டுபிடித்துள்ளனர்.
மேலதிக விசாரணையின் போது, காலாவதியான தேங்காய் எண்ணெய் போத்தல்கள் மற்றும் திகதி மாற்றப்பட்ட தேங்காய் எண்ணெய் போத்தல்கள் என்பன காணப்பட்டன.