சியாட்டில் நகர சமூக விழா ஒன்றில் துப்பாக்கிச்சூடு நடத்தியதில் 5 பேர் பலி

நேற்று, அமெரிக்காவின் வாஷிங்டனில் உள்ள சியாட்டில் நகரில் அமைந்துள்ள ரெய்னர் பீச் பகுதியில் உள்ள சேஃப்வே கடையில் சியாட்டில் சமூக பாதுகாப்பு தொடர்பான ஒரு நிகழ்ச்சி நடந்தது.
இலவச உணவு மற்றும் இசை போன்ற பல ஒன்றிணைக்கும் அம்சங்களின் காரணமாக மக்கள் பெரும்பாலும் நிகழ்வில் ஆர்வத்துடன் பங்கேற்கின்றனர்.
நேற்று நடைபெற்ற நிகழ்ச்சியின் போது, அங்கு கூடியிருந்த நபர்களை துப்பாக்கி ஏந்திய நபர் திடீரென சுடத் தொடங்கினார், இதன் விளைவாக ஐந்து பேர் பரிதாபமாக இறந்தனர். பலியானவர்களில் நான்கு ஆண்களும் ஒரு பெண்ணும் அடங்குவர். 2 பேர் பலத்த காயங்களுடன் மீட்கப்பட்டு ஹார்பர்வியூ மருத்துவ மையத்தில் சேர்க்கப்பட்டுள்ளனர். அங்கு அவர்கள் தற்போது ஆபத்தான நிலையில் உள்ளனர்.
கிங் டோனட் கடைக்கு அருகிலுள்ள ஒரு கடையின் வாகன நிறுத்துமிடத்தில் துப்பாக்கிச் சூடு தொடங்கியதாக சியாட்டில் நகர காவல்துறைத் தலைவர் அட்ரியன் டயஸ் தெரிவித்தார்.
துப்பாக்கிச்சூடு சம்பவம் குறித்து போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். தற்போது வரை யாரும் கைது செய்யப்படவில்லை.
"பல தவறான மனிதர்களிடம் துப்பாக்கிகள் இருக்கின்றன," என இது குறித்து சம்பவ இடத்தில் பேசிய சியாட்டில் நகர மேயர் ப்ரூஸ் ஹேரல் தெரிவித்தார். சியாட்டில் நகர காவல்துறையும், நகர நிர்வாகமும் அங்கு அதிகரித்து வரும் குற்றச் செயல்கள் மற்றும் போதைப்பொருள் பிரச்சனைகளை கையாள முடியாமல் போராடி வருகின்றன.



