வசந்த முதலிகே கைது செய்யப்பட்டார்!
#SriLanka
#Arrest
#Lanka4
#wasantha muthalige
Thamilini
2 years ago
பல்கலைக்கழகங்களுக்கு இடையிலான மாணவர் பேரவையின் முன்னாள் அழைப்பாளர் வசந்த முதலிகே பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
பொரளை மயானத்திற்கு அருகில் வைத்து குருந்துவத்தை பொலிஸாரால் இன்று (27) அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
2020 ஆம் ஆண்டு பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவிற்கு முன்பாக இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தின் போது குழப்பம் ஏற்படுத்தியமை தொடர்பில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையிலேயே அவர் இன்று கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.