பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்த சிறுமி உயிரிழப்பு!
#SriLanka
#Death
#Lanka4
Thamilini
2 years ago
பாதுகாப்பற்ற தண்ணீர் கிணற்றில் விழுந்து நான்கு வயது சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.
வாரியபொல பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பண்டாரகொஸ்வத்தை, மிடியால பிரதேசத்தில் உள்ள வீடொன்றுக்கு அருகில் நேற்று (26.07) காலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வீட்டின் அருகே விளையாடிக் கொண்டிருந்த குழந்தை, வீட்டின் பின்புறம் சுமார் 2 அடி உயரத்தில் இருந்த பாதுகாப்பற்ற கிணற்றில் தவறி விழுந்து உயிரிழந்தது விசாரணையில் தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை வாரியபொல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.