சுற்றுலா பயணிகளை ஈர்க்கும் வகையில்,புதிய திட்டம்!
#SriLanka
Thamilini
2 years ago
தேசியப் பூங்காக்களுக்கு சுற்றுலாப் பயணிகள் எளிதாகச் செல்ல வழிவகுக்கும் வகையில், வனவிலங்கு பாதுகாப்புத் துறை ஆன்லைன் அனுமதி முறையை அறிமுகப்படுத்தியுள்ளது.
கணினி மூலம் டிக்கெட் வழங்குவதில் ஏற்படும் தாமதமங்கள், மற்றும் அசௌகரியங்களை கருத்தில் கொண்டு இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகள் தங்கள் பயணத்தைத் திட்டமிடும்போது, குழு ஆபரேட்டர்கள் ஆன்லைன் அனுமதி முறை மூலம் டிக்கெட்டுகளைப் பெறுவது மிகவும் வசதியானது என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய முறையை உள்ளூர் சுற்றுலா பயணிகளும் பின்பற்றலாம் என திணைக்களம் தெரிவித்துள்ளது.