இரு குழுக்களுக்கு இடையில் ஏற்பட்ட தகராறில் ஒருவர் உயிரிழப்பு!
இரத்தினபுரி - ஹிந்தெல்லன பிரதேசத்தில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட தகராறு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதுடன் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் நேற்று (22.07) இரவு இடம்பெற்றுள்ளது.
ஹிண்டெல்ல பிரதேசத்தில் வசிக்கும் 65 வயதுடைய நபரொருவர் இந்த தாக்குதலில் உயிரிழந்துள்ளதுடன், காயமடைந்தவர்கள் 36 மற்றும் 37 வயதுடைய இரண்டு மகன்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.
நீண்டகாலமாக நிலத்தகராறு காரணமாக ஏற்பட்ட வாய்த்தர்க்கம் காரணமாகவே இந்த கொலை இடம்பெற்றுள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
குற்றச் சம்பவத்துடன் தொடர்புடைய இரண்டு பெண் சந்தேகநபர்கள் மற்றும் ஒரு ஆண் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளதுடன், அவர்கள் 18, 65 மற்றும் 48 வயதுடைய அதே பகுதியைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்துடன் தொடர்புடைய மேலும் சில சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களை கைது செய்வதற்கான மேலதிக விசாரணைகளை இரத்தினபுரி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.