இலங்கைக்கு 3000 மில்லியன் ரூபாவை வழங்கும் இந்தியா!
#Lanka4
#JeevanThondaman
Thamilini
2 years ago
இலங்கையில் வாழும் இந்திய வம்சாவளி மக்களுக்காக 3,000 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதியின் இந்திய விஜயத்தில் கலந்து கொண்ட நீர் வழங்கல் மற்றும் தோட்ட உட்கட்டமைப்பு அபிவிருத்தி அமைச்சர் திரு ஜீவன் தொண்டமான் இதனைத் தெரிவித்தார்.
இந்த நிதியை மலையக கல்வி மற்றும் சுகாதார துறையின் அபிவிருத்திக்காக பயன்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என அமைச்சர் தெரிவித்தார்.