குர்ஆன் எரிப்பைத் தொடர்ந்து இஸ்லாமிய நாடுகளில் வலுக்கும் ஆர்ப்பாட்டம்!

சுவீடனில் குர்ஆ னை அவமதிக்க அனுமதித்த அந்த நாட்டு அதிகாரிகளைக் கண்டிக்கும் விதமாக, இஸ்லாமிய நாடுகளில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்கள் நேற்று தொழுகையின் பின் இடம்பெற்றது.
இது குறித்து அசோசியேட்டட் பிரஸ் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளதாவது: சுவீடன் தலைநகா் ஸ்டாக்ஹோமிலுள்ள ஈராக் தூதரகத்துக்கு எதிரே வியாழக்கிழமை நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தின்போது, சல்வான் மோமிகா என்ற இராக்கிய கிறிஸ்தவா் திருக்குரானை அவமதித்தாா். அந்த ஆா்ப்பாட்டத்துக்கு அனுமதி அளித்த சுவீடன் அரசைக் கண்டித்து, ஈராக், ஈரான், லெபனான் உள்ளிட்ட நாடுகளில் ஆா்ப்பாட்ட ஊா்வலங்கள் வெள்ளிக்கிழமை நடைபெற்றன.
வெள்ளிக்கிழமை சிறப்புத் தொழுகையை முடித்துவிட்டு நூற்றுக்கணக்கானவா்கள் பங்கேற்ற இந்த ஆா்ப்பாட்ட ஊா்வலங்கள் அமைதியாக நடைபெற்றன என்று அந்தச் செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
சுவீடனில் அமைதி முறையில் ஆா்ப்பாட்டம் நடத்துவதற்கான அடிப்படை உரிமைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. அந்த நாட்டில் மதநிந்தனைத் தடைச் சட்டங்கள் 1970-களில் ரத்து செய்யப்பட்டதால், ஆா்ப்பாட்டங்களின் போது எந்த மதத்துக்கு எதிரான செயல்களையும் மேற்கொள்ள அனுமதி அளிக்கப்படுகிறது.
இந்த நிகழ்வின் பின்னணியில், அரசின் அனுமதியுடன் சுவீடனில் நடைபெறும் ஆர்ப்பாட்டங்களின் போது முஸ்லிம்களின் மிகப் புனிதமாகக் கருதும் திருக் குரான் எரிப்புகள் இஸ்லாமிய நாடுகளில் கொந்தளிப்பை ஏற்படுத்தி வருகின்றன.



