மகாராஷ்டிர மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு

#India #Death #Tamilnews #Breakingnews
Mani
2 years ago
மகாராஷ்டிர மாநிலத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்தோர் எண்ணிக்கை 26 ஆக உயர்வு

மகாராஷ்டிர மாநிலம் ராய்காட் மாவட்டத்தில் உள்ள இர்ஷல்வாடி கிராமத்தில் பெய்த கனமழையைத் தொடர்ந்து, பல இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டு, 17 வீடுகள் இடிந்து விழுந்தன.

தற்போது இந்த சம்பவத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 26ஆக உயர்ந்துள்ளது. இதில் 9 பேர் ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்கள்.

தொடர்ந்து நிலச்சரிவு இடிபாடுகளில் யாராவது சிக்கியிருக்கிறார்களா? தேசிய பேரிடர் மீட்புப் படை தொடர்ந்து தேடுதல் மற்றும் மீட்புப் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், தற்போது விசாரணை நடைபெற்று வருகிறது.

2021 ஆம் ஆண்டில், ராய்காட் மாவட்டத்தில் உள்ள மகாட் தாலுகா தலியே கிராமத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் 87 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4