சற்று முன்னர் டில்லிக்கு பயணமானார் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க
#SriLanka
Mayoorikka
2 years ago
சற்று முன்னர் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, தனது தூதுக்குழுவுடன் புதுடெல்லிக்கு பயணமானார்.
ஸ்ரீ லங்கன் விமானச் சேவைக்கு சொந்தமான யு.எல்- 195 என்ற விமானத்தில் இன்று (20) பகல் 1.43 மணியளவில், கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்துக்கு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஹெலிகொப்டரில் வருகைதந்தார்.
அந்த ஹெலியுடன் மற்றுமொரு ஹெலியும் வந்திறங்கியது.
அவர் பயணிக்கும் விமானம் இன்று (20) மாலை 5 மணியளவில் புதுடெல்லி விமான நிலையத்தை அண்மிக்கும்.