கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை நீர்வெட்டு அமுல்
#SriLanka
#Colombo
#water
#Lanka4
#waterfowl
Kanimoli
2 years ago
மின்சார சபையின் அவசர திருத்த வேலைகள் காரணமாக கண்டி மாவட்டத்தின் சில பகுதிகளில் நாளை(20) காலை 8 மணி முதல் மாலை 5 மணி வரை 9 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளது.
இதன்படி. கஹவத்த, குருகொட, புளுகஹதென்ன, ஹிராகடுவ, கஹல்ல, தெலும்பு கஹவத்த, நுகவெல, பலனகல, அஸ்கிரிய, வேகிரிய, புதிய பல்லேமுல்ல, பழைய பல்லேமுல்ல, யட்டிஹலகல, கொண்டதெனிய, ரஜபிகில்ல, மெதவல, ஹுலுகம்மன ஆகிய பகுதிகளில் நீர் விநியோகம் துண்டிக்கப்படவுள்ளதாக தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபை அறிவித்துள்ளது.