இருநூறு மாணவர்களுக்கு கல்விக்காக பணம் வழங்கிய தியாகி!
#SriLanka
Mayoorikka
2 years ago
தியாகி அறக்கட்டளை நிறுவுனர் வாமதேவா தியாகேந்திரன் அவர்களினால் வறிய பாடசாலை மாணவர்கள்இருநூறு பேருக்கு தலா ஆயிரம் ரூபாயில் இருந்து மூவாயிரம் ரூபா வரையில் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பணம் கல்விக்கு தடையாக இருக்கக்கூடாது என்னும் நோக்கில் குறித்த பணம் வழங்கப்பட்டுள்ளது. இன்று மட்டும் இத்தொகையானது வழங்கப்பட்டுள்ளதுடன் இதனை அவர் தொடர்ந்து வழங்கிவருவது குறிப்பிடத்தக்கது.
இந்த தொகை இவர்களுக்கு மாதம் தோறும் வழங்கப்படவுள்ளது. குறித்த மாணவர்களின் பெற்றோர்கள் இன்றைய தினம் இந்த பணத்தினை பெற்றுச் சென்றுள்ளனர்.
அத்துடன் இன்று மட்டும் 40 பேருக்கு மூக்குகண்ணாடியும் வாமதேவன் தியாகேந்திரனால் வழங்கப்பட்டுள்ளது.
தியாகி ஐயாவினுடைய இச்சேவை சகல இஸ்லாம், கிறிஸ்தவ மற்றும் பௌத்த சமயத்தவர்களுக்கும் வழங்கப்படுகிறது.


