யாழில் உள்ள சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சிகள் தொடர்பில் அரசாங்கம் கவனம்!
#SriLanka
Mayoorikka
2 years ago
அரசாங்கத்தின் ஊடக செயற்பாடுகளை பாராளுமன்ற உறுப்பினர் மஹிந்தானந்த அளுத்கமகேவிடம் ஒப்படைக்குமாறு ஜனாதிபதியிடம் யோசனை முன்வைக்கப்பட்டுள்ளதாக சிங்கள ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இதேவேளை, யாழ்ப்பாணம் பிரதேசத்தில் அதிகளவில் பயன்படுத்தப்படும் சட்டவிரோத கேபிள் தொலைக்காட்சிகளை ஒழுங்குபடுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்த வேண்டுமென ஊடகவியலாளர்கள் அரசாங்க அதிகாரிகளிடம் சுட்டிக்காட்டியுள்ளதாக அந்த சிங்கள ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.