கட்டுநாயக்காவில் விமானம் தரையிறங்கியதால் வீட்டின் கூரையை இழந்த நபர்
கட்டுநாயக்க விமான நிலையத்தில் தரையிறங்க வந்து கொண்டிருந்த விமானம் ஒன்று திடீரென மீண்டும் மேலே எழும்பியதால் அந்த விமானப் பாதையில் இருந்த தனது வீடுகளுக்கும் சொத்துக்களுக்கும் பெரும் சேதம் ஏற்பட்டதாக நீர்கொழும்பு பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் கூறுகிறார்.
கனிஷ்க சரத்சந்திர என்ற அந்த நபர் தனது சொத்துக்களுக்கு மிகப்பெரிய சேதம் ஏற்பட்டுள்ளதாக கூறுகிறார்.
அப்போது வீசிய பலத்த காற்றினால் தனது வீடு மட்டுமின்றி தனது அன்றாடச் செலவுக்கு ஏற்ற இரண்டு ஏக்கர் தென்னந்தோப்பு உள்ளிட்ட தோட்டங்களும் நாசமாகியுள்ளதாக அவர் கூறுகிறார்.
கடந்த வியாழன் 05.30க்கும் 05.50க்கும் இடைப்பட்ட காலப்பகுதியில் தாம் இதே நிலையை எதிர்கொண்டதாகவும், அவ்வாறு தரையிறங்கிய விமானம் ஸ்ரீலங்கன் எயார்லைன்ஸ் விமானமான UL-303 என்பதை கண்டறிந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
இந்த விமானம் மிகப்பெரிய ஏர்பஸ் ஏ330 விமானங்களில் ஒன்றாகும் மற்றும் சுமார் 75,000 குதிரைத்திறன் கொண்ட இரண்டு இயந்திரங்களைக் கொண்டுள்ளது.