ஊழல் தடுப்பு மசோதா மீதான குழு விவாதம் இன்று
#SriLanka
#Parliament
Prathees
2 years ago
ஊழலுக்கு எதிரான சட்டமூலம் மீதான குழு விவாதம் இன்று பாராளுமன்றத்தில் நடைபெறவுள்ளது.
மசோதாவின் இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இரண்டு நாட்களுக்கு முன்னதாக நடைபெற்றது. ஆனால், அப்போது மசோதா நிறைவேற்றப்படவில்லை.
இதேவேளை, ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நேற்று தமிழ் அரசியல் கட்சித் தலைவர்களுடனான சந்திப்பில் இது தொடர்பில் கருத்து வெளியிட்டிருந்தார்.
குறித்த சட்டமூலத்திற்கு உச்சநீதிமன்றம் சமர்ப்பித்துள்ள திருத்தங்களை குழு அமர்வின் போது பரிசீலிப்பதாக ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, ஊழலுக்கு எதிரான சட்டமூலத்திற்கு தமது கட்சி சமர்ப்பித்துள்ள பிரேரணைகளுக்கு அரசாங்கத்தின் பதிலின் பிரகாரம் குழு கூட்டத்தின் போது தீர்மானம் எடுக்கப்படும் என சமகி ஜனபலவேகவின் பொதுச் செயலாளர் பாராளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் மத்தும பண்டார தெரிவித்துள்ளார்.