லண்டனுக்கு விஜயம் செய்த கிளிநொச்சிப் பிரதேச கல்வியியலாளர் மார்க்கண்டு பரம்சோதி அவர்கள்(புகைப்படங்கள் இணைப்பு)
கிளிநொச்சிப் பிரதேச கல்வி வளர்ச்சியில் பெரும் பணியாற்றிய கல்வியியலாளர் திருமதி மார்க்கண்டு பரம்சோதி அவர்கள் இலண்டன் வந்திருந்தபோது கிளிபீப்பிள் அமைப்பும் கிளி புனித திரேசா மகளீர் பாடசாலை பழைய மாணவிகளும் சந்தித்து பழைய நினைவுகளை மீட்டியதுடன் அவரது சேவையால் தாம் அடைந்த வளர்ச்சி பற்றிக் குறிப்பிட்டு தமது நன்றிகளையும் பகிர்ந்துகொண்டனர்.
அவரை மதிப்பளித்து பெருமகிழ்வு கொண்டனர். இரண்டு சகாப்தமாக சுமார் 24 வருடங்கள் ஆசிரியராகவும் அதிபராகவும் கிளி புனித திரேசா மகளீர் பாடசாலையில் கடமையாற்றி பின்னர் உதவி்க் கல்விப் பணிப்பாளராக பணிபுரிந்து ஒய்வுபெற்றவர்.
கிளிநொச்சியில் இயங்கும் ஒரேயொரு மகளீர் பாடசாலையான கிளி புனித திரேசா மகளீர் பாடசாலையின் வரலாற்றில் புகழ்பூத்த அதிபராகவும் நெருக்கடியான காலங்களில் மிகவும் அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அதிபராகவும் இருந்துள்ளார். அவருக்கு என்றும் எமது வாழ்த்துகள்.









