ரஷ்ய கிரிமியா பாலம் ஊடான போக்குவரத்து மட்டுப்படுத்தப்பட்டுள்ளது!
#world_news
#Ukraine
#Lanka4
Thamilini
2 years ago
ரஷ்ய கிரிமியா பாலம் ஊடான முழுமையான போக்குவரத்து நவம்பர் மாதம் வரையில் சீரமைக்கப்படாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிமியா பாலத்தில் நேற்று (17.07) வெடிப்பு சம்பவம் ஒன்று பதிவாகியது. இதனையடுத்து அந்த பலத்தின் ஒரு பகதி இன்னும் சீரமைக்கப்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுடனான சந்திப்பின் போது, துணைப் பிரதமர் மராட் குஸ்னுலின், நவம்பர் வரை பாலம் ஊடாக முழுமையான போக்குவரத்து இடம்பெறாது என அறிவித்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ண்டுவெடிப்புக்குப் பின்னர் சாலைப் போக்குவரத்து ஓரளவுக்கு மீட்டெடுக்கப்பட்டது, இருப்பினும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.