வடகொரியாவிற்குள் அத்துமீறி நுழைந்த அமெரிக்க பிரஜை!
#world_news
#NorthKorea
#Lanka4
Thamilini
2 years ago
தென்கொரியாவில் இருந்து வடகொரியாவிற்குள் அமெரிக்க பிரஜை ஒருவர் எல்லை தாண்டி நுழைந்துள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
கொரிய தீபகற்பத்தில் பாதுகாப்பை உறுதி செய்வதை இலக்காகக் கொண்ட அமைப்பு, இந்த தகவலை டுவிட்டரில் தெரிவித்துள்ளது.
குறித்த அமெரிக்க பிரஜை கொரிய எல்லை கிராமத்திற்கு சுற்றுப்பயணம் செய்ததாகவும், அனுமதியின்றி வடபகுதியில் எல்லைத் தாண்டி சென்றதாகவும் கூறப்படுகிறது.
அவர் தற்போது வடகொரியாவின் காவலில் இருப்பதாகவும், இந்த சம்பவத்தை தீர்க்க ஐ.நா கட்டளை வடகொரியாவுடன் இணைந்து செயல்படுவதாகவும் சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.