அக்கரைப்பற்று கடற் பகுதியில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிவதாக தகவல்!
#SriLanka
Thamilini
2 years ago
அக்கரைப்பற்று கடற்பகுதியில் கப்பல் ஒன்று தீப்பிடித்து எரிவதாக கடற்படையினருக்கு நேற்று (16.07) தகவல் கிடைத்துள்ளது.
இதனையடுத்து திருகோணமலை கடற்படைத் தளத்துக்குச் சொந்தமான டோரா கப்பல் ஒன்று கடற்படையினர் சிலருடன் தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகிறது.
எவ்வாறாயினும் இதுவரையில் தீ பிடித்து எரிவாதாக சொல்லப்பட்ட கப்பல் இனங்காணப்படவில்லை எனத் தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விடயம் தொடர்பில் மேலதிக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை.