அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்

#SriLanka #Jaffna #Meeting #Lanka4
Kanimoli
2 years ago
அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற கலந்துரையாடல்

அதிகாரப் பகிர்வுக்கான இயக்கத்தின் ஏற்பாட்டில் 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துவதும் - இந்தியாவின் வகிபாகமும் பற்றிய கலந்துரையாடலொன்று மேற்கொள்ளப்பட்டது. யாழ்ப்பாண மத்திய கல்லூரி அருகிலுள்ள தந்தை செல்வா கலையரங்கத்தில் இன்று சனிக்கிழமை(15) பிற்பகல் 3 மணிக்கு இடம்பெற்றது.

 யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வேந்தர் பேராசிரியர் சி. பத்மநாதன் தலைமையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் யாழ்பாணப் பல்கலைக்கழக சட்டத்துறைத் தலைவர் கோசலை மதன், அகில இலங்கைத் தமிழர் மகாசபை தலைவர் கலாநிதி காசிலிங்கம் விக்னேஸ்வரன், தமிழ் மக்கள் கூட்டணி தலைவர் நீதியரசர் க. வி. விக்னேஸ்வரன், ஈழ மக்கள் ஜனநாயகக் கட்சி சார்பாக சி.தவராசா,தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சி சார்பில் பூ.பிரசாந்தன்,

 இலங்கைத் தமிரசுக் கட்சி சார்பாக நிர்வாக செயலாளர் எக்ஸ்.குலநாயகம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணி தலைவர் சுரேஷ் பிரேமசந்திரன், தமிழர் சமூக ஜனநாயகக் கட்சி தலைவர் திருநாவுக்கரசு சிறீதரன், சமத்துவக் கட்சி தலைவர் மு.சந்திரகுமார், ஈழவர் ஜனநாயக முன்னணி செயலாளர் நாயகம், இராஜநாதன் பிரபாகரன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணி பிரதிநிதி பா.கஜதீபன் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.

images/content-image/1689500224.pngimages/content-image/1689500232.jpgimages/content-image/1689500240.jpg

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4