மருந்துகள் தொடர்பில் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் பற்றி விசாரணை நடத்த முடிவு
#SriLanka
#Keheliya Rambukwella
#Hospital
#Lanka4
#tablets
Kanimoli
2 years ago
மருந்துகள் தொடர்பில் பல்வேறு தரப்பினர் முன்வைக்கும் குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் விரைவாக விசாரணை நடத்த சுயாதீன நிபுணர் குழுவொன்று நியமிக்கப்படும் என சுகாதார அமைச்சர் கெஹலியத ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.
இந்தக் குழுவில் ஐந்து விசேட வைத்தியர்கள் அடங்கியுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டுள்ளார். அதற்கான அமைச்சரவை அங்கீகாரம் பெறப்படும் என அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, மருந்துகளின் தரம் மற்றும் சுகாதாரத் துறையின் நிலைமை தொடர்பில் அடுத்த வாரம் பாராளுமன்றத்தில் விசேட அறிக்கையொன்றை வெளியிடவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.