இத்தாலியின் 15 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை
தெற்கு ஐரோப்பா மிகவும் வெப்பமான காலநிலையால் பாதிக்கப்பட்டுள்ளது. இத்தாலி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
அதிக வெப்பமான காலநிலை காரணமாக இத்தாலியின் 15 நகரங்களுக்கு சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அதிக வெப்பநிலையால் ஆரோக்கியமானவர்கள் கூட ஆபத்தில் இருப்பதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
ரோம், புளோரன்ஸ், போலோக்னா உள்ளிட்ட சுற்றுலா நகரங்கள் வெப்பத்தால் அதிகம் பாதிக்கப்பட்ட பகுதிகளாகும்.
இத்தாலி மட்டுமின்றி, ஸ்பெயின், பிரான்ஸ், ஜெர்மனி, போலந்து போன்ற நாடுகளும் அதிக வெப்பத்தால் பாதிக்கப்பட்டுள்ளன. இதனிடையே, கடும் வெப்பமான காலநிலையால் அமெரிக்காவும் பாதிக்கப்பட்டுள்ளது.
புளோரிடா, டெக்சாஸ் மற்றும் கலிபோர்னியா ஆகிய மாநிலங்கள் அதிகம் பாதிக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
குறைந்த பட்சம் 113 மில்லியன் அமெரிக்கர்கள் அதிக வெப்பநிலையால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
டெக்சாஸ் மாகாணத்தில் வசிப்பவர்களால் குளிரூட்டிகளின் பயன்பாடு அதிகரித்துள்ளதால், அந்த மாநிலத்தில் மின் பயன்பாடும் கணிசமாக அதிகரித்துள்ளதாக அதிகாரிகள் கூறுகின்றனர்.
அடுத்த சில நாட்களில் சுமார் 43 டிகிரி செல்சியஸ் வெப்பநிலையால் அமெரிக்கா பாதிக்கப்படும்
சுமார் 27 மில்லியன் மக்கள் பாதிக்கப்படுவார்கள் என்று அமெரிக்க வானிலை அதிகாரிகள் எச்சரித்துள்ளனர்.