வாக்னர் படைத் தலைவர் பிரிகோஸின் இறந்துவிட்டாரா?

#world_news
வாக்னர் படைத் தலைவர் பிரிகோஸின் இறந்துவிட்டாரா?

ரஷ்ய இராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சி செய்த வாக்னர் கூலிப்படைத் தலைவர் எங்கு உள்ளார் என்பது இன்னும் மர்மாக இருக்கும் சூழலில் அவர் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

 இந்நிலையில், இதுகுறித்து பைடன் கிண்டலாக ஒரு கருத்தை வெளியிட்டுள்ளார். அதில் பைடன், நான் மட்டும் பிர்கோஸினாக இருந்திருந்தால். எனக்கு அளிக்கப்படும் உணவைக் கூட கவனமாகவே உட்கொள்வேன் என்று கூறியுள்ளார்.

 ரஷ்ய ஆதரவு கூலிப்படையாக இருந்த வாக்னர் குழு ரஷ்யாவுக்கு எதிராக திரும்பி மாஸ்கோவை நோக்கி அணிவகுத்துச் சென்றது. எனினும் ஒரே நாளில் இந்த கிளர்ச்சி முடிவுக்கு வந்தது.

 கிளர்ச்சி முடிவுக்கு வந்த சில நாட்களிலேயே வாக்னர் குழுவின் தலைவர் பிர்கோஸினை ரஷ்ய அதிபர் விளாதிமிர் புதின் சந்தித்து பேசியது தற்போது தெரியவந்துள்ளது. 

ரஷ்ய அரசும் இந்த சந்திப்பை உறுதிப்படுத்தியுள்ளது. ஆனால், அதன் பின்னர் பிர்கோஸின் எங்கிருக்கிறார் என்பது தெரியவில்லை. பிர்கோஸின் பெலாரஸ் நாட்டில் இருப்பதாகச் சொல்லப்பட்டது. ஆனால் அவர் அங்கில்லை என்று அந்நாட்டு அதிபரே அறிவித்துவிட்டார்.

 இந்நிலையில் அந்த சந்திப்பின்போதே பிர்கோஸின் கொல்லப்பட்டிருக்கலாம் என்ற தகவல்கள் உலா வரும் சூழலிலேயே அமெரிக்க அதிபர் பைடன் இக்கருத்தினைத் தெரிவித்துள்ளார்.

 ரஷ்ய அதிபர் புதினுக்கு புதிய நெருக்கடி தரும் வாக்னர் ஆயுதக் குழுவின் பின்புலம் ஒரு தசமத்துக்கும் குறைவானதாகத்தான் இருக்கிறது. வாக்னர் ஆயுதக் குழு என்பது ரஷ்யாவில் இயங்கிவரும் தனியார் ராணுவ ஒப்பந்த அமைப்பாகும்.

 இது ஒருவித கூலிப்படை என்றும் கூறலாம். ஏனெனில், ரஷ்யா மட்டுமல்லாது லிபியா, மாலி, சிரியா எனப் பல பகுதிகளிலும் உள்நாட்டுப் போரில் ஒப்பந்தத்தின் அடிப்படையில் அரசாங்கத்துக்கு ஆதரவாக இந்தக் குழுவினர் இயங்குகின்றனர்.

 ஆனால், உலகம் முழுவதும் இந்தக் குழு சட்டத்துக்கு அப்பாற்பட்டே செயல்படுகிறது. ரஷ்யாவிலும் தனியார் ராணுவ ஒப்பந்தக்காரர்கள் சட்டபூர்வமாக தடை செய்யப்பட்டுள்ளனர்.

 ஆனால், மறைமுகமாக அதிபர் புதினின் ஆதரவோடு, ராணுவத்தின் சம்மதத்தோடு தேவைப்படும்போது இந்தக் குழு இயக்கிக் கொள்ளப்படுகிறது. வாக்னர் ஆயுதக் குழு உக்ரைனின் கிழக்குப் பகுதியில் ராணுவத் தாக்குதலின்போது பயன்படுத்திக் கொள்ளப்பட்டது. 

குறிப்பாக, கிழக்கு உக்ரைனின் பக்முத் பகுதி கைப்பற்றப்பட்டதில் வாக்னர் ஆயுதக் குழுவின் செயல்பாடுகளுக்கு அதிபர் புதினே பாராட்டுகளைத் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டிமிட்ரி உக்டின் என்ற முன்னாள ரஷ்ய அதிகாரி மற்றும் யெவ்ஜின் பிர்கோஸின் இருவரும் சேர்ந்தே வாக்னர் படையை 2014ல் உருவாக்கியதாக தெரியவரும் வேளையில் அக்காலத்தில் பிரிகோஜின் புடினின் தலைமை சமையல் நிபுணராக இருந்தமை குறிப்பிடத்தக்கது. 


உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!