தலைகீழாக கவிழ்ந்த தனியார் பஸ்: 15 பேர் வைத்தியசாலையில்
#SriLanka
#Accident
#Badulla
Prathees
2 years ago
தெமோதர நீர் வழங்கல் சபைக்கு அருகில் தனியார் பேருந்து ஒன்று கவிழ்ந்ததில் இன்று (15) காலை விபத்து ஏற்பட்டுள்ளது.
கொழும்பு – பதுளை பஸ்ஸே இவ்விபத்தில் சிக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இந்த விபத்தின் காரணமாக பஸ் முற்றாக தலைகீழாக கவிழ்ந்துள்ளதாகவும் விபத்துக்கான காரணம் இதுவரை தெரியவரவில்லை எனவும் அங்கிருந்து கிடைக்கும் செய்திகள் தெரிவிக்கின்றன.
எனினும், சுமார் 15 பேர் காயமடைந்துள்ளதாகவும், காயமடைந்தவர்கள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
எல்ல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொள்ளவுள்ளனர்.