ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை

#India #Death #Tamil Nadu #Tamil People #Tamilnews
Mani
2 years ago
ராசிபுரம் திமுக பெண் கவுன்சிலர் குடும்பத்துடன் தற்கொலை

நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தில் சைலியர் திருமண மண்டபம் அருகே வசித்து வந்த தேவிப்பிரியா, 13-வது வார்டு திமுக கவுன்சிலராக இருந்து வந்தார். இவரது கணவர் அருண்லால், அதே பகுதியில் நகைக்கடை ஒன்றை நடத்தி வந்தார். இவர்களுக்கு இரண்டு பெண் பிள்ளைகள் உள்ள நிலையில், மூத்த மகள் சென்னையில் உள்ளார்.

இந்த நிலையில், தேவிப்பிரியா, கணவர் அருண்லால், இரண்டாது மகள் மோனிகா ஆகியோர் வீட்டில் சடலமாக மீட்கப்பட்டனர். தகவலறிந்து சென்ற காவல்துறையினர், 3 பேரின் உடல்களை கைப்பற்றி கூராய்வுக்காக ராசிபுரம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். கடன் தொல்லை காரணமாக, குடும்பத்துடன் கவுன்சிலர் தற்கொலை செய்து கொண்டதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4