மரத்தை வெட்டியதற்கு சர்வதேச விசாரணையை கோருகிறார் ஆனந்த சாகர தேரர்!

#SriLanka #Tree #Lanka4
Thamilini
2 years ago
மரத்தை வெட்டியதற்கு சர்வதேச விசாரணையை கோருகிறார் ஆனந்த சாகர தேரர்!

கம்பஹா தரல்வா பகுதியில் உள்ள 'பன்டு கரந்த' மரம் வெட்டப்பட்டு அகற்றப்பட்ட விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  

இந்நிலையில்  இது குறித்து தேசிய மற்றும் சர்வதேச விசாரணையை தொடங்க வேண்டும் என வணக்கத்திற்குரிய பஹியங்கல ஆனந்த சாகர தேரர் தெரிவித்துள்ளார். 

உலகில் உள்ள பனை மரங்களில் ஏழு பனை மரங்கள் இருப்பதாகவும் தற்போது ஆறு மரங்கள் மாத்திரமே இருப்பதாக தெரிவித்த அவர், இந்த மரத்தை வெட்டுவது பாரிய சுற்றுச்சூழல் குற்றம் எனவும் தெரிவித்தார். 

இதற்கு உடனடியாக தேசிய மற்றும் சர்வதேச விசாரணை தொடங்க வேண்டும் என்றும் அவர் கூறுகிறார். 

அதிவேக  நெடுஞ்சாலை நிர்மாணிப்பு பணிகளுக்காக குறித்த மரம் வெட்டப்பட்டதாக விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 


இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4