அரசியலில் இருந்து ஓய்வு பெறும் தாய்லாந்து பிரதமர்!

#world_news #Lanka4
Thamilini
2 years ago
அரசியலில் இருந்து ஓய்வு பெறும் தாய்லாந்து பிரதமர்!

தாய்லாந்து பிரதமர் பிரயுத் சான் ஓச்சா அரசியலில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்துள்ளார். பிரயுத் சான்-ஓச்சாவுக்கு இப்போது 69 வயதாகிறது.

நிலையான அரசாங்கம் அமையும் வரை தான் தற்காலிகமாக ஆட்சியில் இருப்பேன் எனவும் அவர் தனது அறிவிப்பில்  தெரிவித்துள்ளார். 

கடந்த 2014 இல், தாய்லாந்து அரசியல் ரீதியாக நிலையற்ற தன்மையை பெற்றது. அந்நாட்டு இராணுவம் ஆட்சியைக் கைப்பற்றிய பின் இராணுவத் தளபதியாக பதவி வகித்த பிரயுத் சான்-ஓச்சா பிரதமரானார்.

பின்னர் 2019 இல் பொதுத் தேர்தலை நடத்திய பிரயுத் சான்-ஓச்சா, ஒரு சிறந்த ஆணையை வென்று மீண்டும் பிரதமரானார் என்பது குறிப்பிடத்தக்கது. 

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4