ஓய்வூதியத்திற்கு முன்னரான கொடுப்பனவை பெற்றுக்கொள்ள இணையத்தளத்தின் மூலம் அறியலாம்!
#SriLanka
#Bank
Mayoorikka
2 years ago
ஊழியர் சேமலாப நிதிய உறுப்பினர்கள், ஓய்வூதியத்திற்கு முன்னரான, 30 சதவீத நன்மைக் கொடுப்பனவினை பெற்றுக்கொள்வதற்கான தகைமை குறித்து, இணையத்தளம் மூலம் அறிந்துகொள்ள முடியும் என தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, www.labourdept.gov.lk என்ற தொழில் திணைக்களத்தின் இணையத்தளத்தினை அணுகுவதன் மூலம், அந்தத் தகவல்களை அறிந்து கொள்ள முடியும்.
30 சதவீத நன்மைக் கொடுப்பனவினை பெற்றுக்கொள்ளவதற்கான தகுதியுடையவர்களா என்பதனை, ஊழியர்கள் இதன்மூலம் அறிந்துகொள்ளலாம் என தொழில் திணைக்களம் தெரிவித்துள்ளது.