இன்று நேபாளத்தில் உலங்கு வானுர்தி காணாமல் போயுள்ளது

#world_news #Helicopter #நேபாளம்
இன்று நேபாளத்தில் உலங்கு வானுர்தி காணாமல் போயுள்ளது

இன்று நேபாளத்தில்  ஒரு  ஹெலிகாப்டர் காணாமல் போனதாக கிடைத்த தகவலையடுத்து விபத்தில் 5 பேர் உயிரிழந்தாக தெரிவிக்கப்பட்டது.

 நேபாளத்தில் காத்மாண்டுவில் இருந்து சோலுகும்பு பகுதிக்கு 6 பேருடன் சென்ற 9என்எம்வி(9NMV) என்ற ஹெலிகாப்டரைக் காணவில்லை என இன்று (செவ்வாய்க்கிழமை) காலை தகவல் வெளியானது.

 காலை 10.12 மணிக்கு தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டதாகக் கூறப்படும் ஹெலிகாப்டரில் கேப்டன் மற்றும் 5 வெளிநாட்டவர்கள் என 6 பேர் பயணித்ததாகக் கூறப்பட்டது. 

 இந்நிலையில் ஹெலிகாப்டர், எவரெஸ்ட் சிகரத்தின் அருகே மரத்தின் மீது மோதி ஏற்பட்ட விபத்தில் 5 பேர் உயிரிழந்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இதனையடுத்து தேடுதலில்5 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளதாகவும் ஒருவரைத் தேடும் பணி நடைபெற்று வருவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4