இலங்கையர்களுக்கு வேலைவாய்ப்பு தொடர்பில் ஜப்பானிய அதிகாரிகளுடன் கலந்துரையாடல்
#SriLanka
#Japan
Mayoorikka
2 years ago
ஜப்பானிய அதிகாரிகளுடன் இலங்கை வேலைவாய்ப்பு பணியகம் கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளது.
இலங்கையர்களுக்கு ஜப்பானில் அதிக தொழில்வாய்ப்புகளை பெற்றுக் கொடுப்பது தொடர்பில் இந்த கலந்துரையாடலில் ஆராயப்பட்டுள்ளது.
ஜப்பானிய தொழில்நுட்ப பயிலுனர் ஆட்சேர்ப்பு நிறுவனமொன்றின் தலைவர் உள்ளிட்ட விசேட பிரதிநிதிகள் குழுவொன்று இலங்கை வந்துள்ளது.
அந்தக் குழு, வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்திற்கு அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில், குறித்த விடயம் தொடர்பில் அவதானம் செலுத்தப்பட்டுளளது