விவசாய அமைச்சின் பால் பதப்படுத்தும் தொழிற்சாலை இன்று திறந்து வைக்கப்பட்டது
#SriLanka
#Mahinda Amaraweera
#Milk Powder
#Lanka4
Kanimoli
2 years ago
பிரான்ஸ் அரசாங்கத்தின் சலுகைக் கடன் திட்டத்தின் கீழ் விவசாய அமைச்சின் கால்நடை அபிவிருத்திப் பிரிவு 06 சிறிய அளவிலான பால் பதப்படுத்தும் தொழிற்சாலைகளை நிறுவவுள்ளது.
இவற்றில் முதலாவது இன்று (04) வாரியபொல மின்ஹெட்டிய பிரதேசத்தில் திறந்து வைக்கப்பட்டது. இந்த பால் பதப்படுத்தும் நிலையம் விவசாய அமைச்சர் மகிந்த அமரவீர தலைமையில் திறந்து வைக்கப்பட்டது. விவசாயிகளுக்கு நாளாந்தம் 4.2 மில்லியன் ரூபா நன்மை கிடைக்கின்றது.
இந்த பால் வழங்கும் தொழிற்சாலையில் உற்பத்தி செய்யப்படும் திரவப் பால், பாடசாலை மாணவர்களுக்கு வழங்கும் திட்டத்தில் ஈடுபட்டுள்ளது.
திரவப் பால் பாவனையை இந்நாட்டில் பிரபலப்படுத்த இது உதவும் என விவசாய அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.