திருகோணமலையில் துப்பாக்கிச்சூடு : இருவர் காயம்!
#SriLanka
#Trincomalee
#Lanka4
Dhushanthini K
1 year ago

திருகோணமலை குச்சவெளி பொலிஸ் பிரிவிற்குற்பட்ட பகுதியில் இடம்பெற்ற துப்பாக்கிச்சூட்டு சம்பவத்தில் இளைஞர்கள் இருவர் காயமடைந்துள்ளனர்.
குறித்த சம்பவம் இன்று (திங்கட்கிழமை) அதிகாலை இடம்பெற்றுள்ளது.
இதில் காயமடைந்த இளைஞர்கள் இருவரும்தற்போது திருகோணமலை பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் கூறியுள்ளனர்.
குச்சவெளி- வடலிக்குளம் பகுதியைச் சேர்ந்த 17 வயதுடைய ஏ.அஸ்மி மற்றும் 21 வயதுடைய அஸ்கான் ஆகிய இருவரே துப்பாக்கிபிரயோகத்திற்கு உள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவம் குறித்த மேலதிக விசாரணைகளை திருகோணமலை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.



