770 லட்சம் வாகன திருட்டு.. ஒரே நாளில் சந்தேக நபர்கள் கைது

#SriLanka #Arrest #Police #Robbery
Prathees
2 years ago
770 லட்சம் வாகன திருட்டு.. ஒரே நாளில் சந்தேக நபர்கள் கைது

கைது தெல்தெனிய வாகனங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருக்கும் முற்றத்தில் இரு ஊழியர்களை பயமுறுத்தி சுமார் 770 இலட்சம் ரூபா பெறுமதியான 03 டிஃபென்டர் ஜீப்கள் மற்றும் வான் ஒன்று நேற்று முன்தினம் அதிகாலை கொள்ளையடிக்கப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர். 

நேற்று (29) முன்தினம் அதிகாலை தெல்தெனிய கெங்கல்ல பகுதியில் உள்ள வாகனத் தளமொன்றில் ஐந்து பேர் கொண்ட கொள்ளைக் கும்பல் புகுந்துள்ளது.

அப்போது, ​​வாகன முற்றத்தில் இருந்த ஊழியர்கள் இருவரையும் கட்டிப்போட்டு, 4 சொகுசு வாகனங்கள் எடுத்துச் செல்லப்பட்டன.

 பொலிஸாருக்கு கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில், 3 திருடப்பட்ட ஜீப்புகளுடன் தப்பிச் சென்ற நான்கு சந்தேகநபர்கள் வத்தேகம மற்றும் தெல்தெனிய பொலிஸ் அதிகாரிகளினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த இரண்டு ஜீப்புகளும் எம்.பி.யின் மகனின் வீட்டுக்குப் பின்னால் உள்ள கேரேஜ் ஒன்றில் நிறுத்தப்பட்டிருந்தன.

வத்தேகம, தொரகமுவ, சிறிமல்வத்த பிரதேசத்தில் உள்ள வீடொன்றின் பின்புறம் உள்ள கராஜ் ஒன்றில் திருடப்பட்ட 2 டிஃபென்டர் ரக ஜீப்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன.

 நேற்று மாலை சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. 

கைது செய்யப்பட்ட மூன்று சந்தேக நபர்களில் ஒருவர் மத்திய மாகாண சபையின் முன்னாள் உறுப்பினர் ஒருவரின் மகனாவார்.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர்கள் 27, 28, 32 மற்றும் 34 வயதுடைய குன்னப்பன, வட்டுப்பிட்டிவல, தொரகமுவ மற்றும் ரஜவெல்ல பிரதேசங்களைச் சேர்ந்தவர்கள் என பொலிஸார் தெரிவித்தனர்.

திருடப்பட்ட சொகுசு வேன் நேற்று பொல்கொல்ல நீர்த்தேக்கத்திற்கு செல்லும் வழியில் கைவிடப்பட்ட நிலையில் பொலிஸாரால் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!