பயங்கரவாத குழுக்களுக்கு எதிராக பாகிஸ்தான் அரசு நடவடிக்கை எடுக்க அமெரிக்கா முடிவு
#SriLanka
#Pakistan
#Lanka4
Kanimoli
2 years ago

பாகிஸ்தானில் லஷ்கர்-இ-தொய்பா, ஜெய்ஸ்-இ-முகமது உள்ளிட்ட பல்வேறு பயங்கரவாத குழுக்கள் செயல்படுகின்றன. இவை உலக நாடுகளுக்கு அச்சுறுத்தலாக உள்ளன.
எனவே பயங்கரவாதிகள் தொடர்பான பிரச்சினையை பாகிஸ்தானிடம் அமெரிக்கா தொடர்ந்து எழுப்பி வருகிறது.இந்த நிலையில் பாகிஸ்தானில் செயல்படும் அனைத்து பயங்கரவாத குழுக்கள் மற்றும் அதன் முன்னணி அமைப்புகளை நிரந்தரமாக கலைக்கும் முயற்சிகளை முடுக்கிவிடுமாறு அமெரிக்க வெளியுறவு அமைச்சகம் கேட்டுக்கொண்டுள்ளது.
இதற்காக பாகிஸ்தான் அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு அமெரிக்கா முழு ஒத்துழைப்பு அளிக்கும் எனவும் அமெரிக்க வெளியுறவு அமைச்சக செய்தித்தொடர்பாளர் மேத்யூ மில்லர் கூறினார்.



