31 பேர் உயிரிழந்த சீன உணவக குண்டு வெடிப்பின் காரணத்தை வெளியிட்ட அரசு

#China #Death #Hotel #Blast
Prasu
3 years ago
31 பேர் உயிரிழந்த சீன உணவக குண்டு வெடிப்பின் காரணத்தை வெளியிட்ட அரசு

வடமேற்கு சீனாவின் யின்சுவான் நகரில் உள்ள உணவகம் ஒன்றில் ஏற்பட்ட வெடி விபத்தில் 31 பேர் உயிரிழந்துள்ளனர்.

 பார்பிக்யூ உணவகத்தின் செயல்பாட்டின் போது திரவ பெட்ரோலிய வாயு கசிவு காரணமாக வெடிப்பு ஏற்பட்டதாக அந்நாட்டு அரசு தெரிவித்துள்ளது.

குண்டுவெடிப்பில் காயமடைந்த 7 பேர் மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளனர், அவர்களின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக கூறப்படுகிறது.

அவர்களில் தீக்காயம் அடைந்தவர்களும், வெடித்து சிதறிய கண்ணாடியால் காயம் அடைந்தவர்களும் அடங்குவர். சீன ஊடகங்களும் உணவகத்தில் இருந்து புகை வெளியேறுவதாகவும், ஏராளமான தீயணைப்பு வீரர்கள் இருப்பதாகவும் செய்திகள் தெரிவிக்கின்றன

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4