இலங்கைக்கு தொடர்ந்தும் ஆதரவு வழங்குவோம்: சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர்
#SriLanka
#IMF
Mayoorikka
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் கிறிஸ்டலீனா ஜோர்ஜியாவை சந்தித்து கலந்துரையாடல் ஒன்றை மேற்கொண்டுள்ளார்.
சமகால பொருளாதார சவால்களை எதிர்கொள்வதற்காக, அரசாங்கம் முன்னெடுக்கும் நடவடிக்கைகளை, சர்வதேச நாணய நிதியத்தின் பணிப்பாளர் வரவேற்றுள்ளார்.
அதேவேளையில், இலங்கை மக்களின் வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்துவதற்கான பொருளாதார சீர்திருத்தங்களுக்கு ஆதரவளிக்கும் சர்வதேச நாணய நிதியத்தின் உறுதிப்பாட்டை அவர் மீண்டும் வலியுறுத்தி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது