அமெரிக்காவில் பிரதமர் மோடி: இன்று யோகா தின கொண்டாட்டத்தில் பங்கேற்றார்
அரசு முறை பயணமாக அமொிக்கா சென்றுள்ள பிரதமர் நரேந்திர மோடி இன்று நியூயார்க்கில் உள்ள ஐநா தலைமையகத்தில் நடைபெறவுள்ள யோகா தின கொண்டாட்டங்களில் கலந்து கொள்கிறாா்.
அமெரிக்க அதிபர் ஜோ பைடன், அவரது மனைவி ஜில் ஜேக்கப்பின் சிறப்பு அழைப்பிதழின்பேரில் பிரதமர் நரேந்திர மோடி தனி விமானம் மூலம் அமெரிக்கா புறப்பட்டு சென்றார். டெல்லியில் இருந்து நேற்று புறப்பட்டு அமெரிக்காவின் நியூயார்க் நகருக்கு இரவு சென்றடைந்தாா். அங்கு அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. முக்கிய தலைவா்கள் பிரதமா் மோடியை வரவேற்றனா். மேலும் அமொிக்க வாழ் இந்தியா்கள் வழி நெடுகிலும் காத்திருந்து அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனா். தொடா்ந்து அவா் வான்வழியாக லோட்டே நியூயார்க் அரண்மனைக்கு புறப்பட்டு சென்றாா். அப்போது அவா் மன்ஹாட்டன் ஸ்கைலைன், சென்ட்ரல் பார்க் உள்ளிட்டவைகளை கண்டு ரசித்தபடி சென்றாா்.
மோடியை வரவேற்பதற்காக நியூயார்க்கில் உள்ள ஹோட்டல் முன்பு காத்திருந்த ஏராளமான இந்திய புலம்பெயர்ந்தோர் கர்பா நிகழ்ச்சி நடத்தினர். இதற்கிடையே பிரதமர் நரேந்திர மோடி, எழுத்தாளர் மற்றும் கல்வியியல் பேராசிரியரான ராபர்ட் தர்மன், கட்டுரையாளர் மற்றும் புள்ளியியல் பேராசிரியரான நாசிம் நிக்கோலஸ் தலேப் ஆகியோரை சந்தித்து உரையாடினாா்.