டுவிட்டர் உலகின் மிகத் துல்லியமான நிகழ்நேர தகவல் ஆதாரமாக மாற உள்ளது
#Twitter
#world_news
#information
#Breakingnews
Mani
2 years ago
அமெரிக்காவை தலைமையிடமாக கொண்டு டுவிட்டர் நிறுவனம் செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ட்விட்டரை வாங்கியதிலிருந்து, உலகின் மிகப் பெரிய பணக்காரரான எலோன் மஸ்க், டுவிட்டரில் பல்வேறு அதிரடி மாற்றங்களைச் செய்துள்ளார். தவறான தகவல்களை அவர் கையாளும் விதம் குறித்து மக்கள் வருத்தமடைந்தனர். இதனையடுத்து டுவிட்டரின் தலைமை நிர்வாகியாக லிண்டா யாகரினோ என்ற பெண்மணி ட்விட்டர் தலைவராக நியமிக்கப்பட்டார்.
லிண்டா யாகரினோ டுவிட்டர் 2.0க்கான திட்டங்களை கோடிட்டுக் காட்டும் செய்தி அறிக்கையை வெளியிட்டார். உலகளவில் மிகத் துல்லியமான நிகழ்நேர தகவல் ஆதாரமாக மாற டுவிட்டரை உருவாக்க நிறுவனம் முயற்சிப்பதாகவும் அவர் வெளிப்படுத்தியுள்ளார்.