கேரளாவில் கடல் அரிப்பால் சாலை வெள்ளத்தில் மூழ்கியது

#Road #Tamilnews #Kerala #ImportantNews #Ocean
Mani
3 years ago
கேரளாவில் கடல் அரிப்பால் சாலை வெள்ளத்தில் மூழ்கியது

தென்மேற்கு பருவமழை காரணமாக கேரள மாநிலம் திருவனந்தபுரம் உள்ள பொழியூரில் கடல் அரிப்பு ஏற்பட்டு கடற்கரையை ஒட்டியுள்ள 6 வீடுகள் சேதம் அடைந்துள்ளன. அவர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்காக, மேலும் 47 குடும்பங்கள் பாதுகாப்பான இடங்களுக்கு தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

கொல்லம்கோட்டில் இருந்து தார்சாலையில் உள்ள நீரோடி வரையிலான ஒரு கிலோ மீட்டர் தூரம் முழுவதும் வெள்ளத்தில் மூழ்கியது. தொடர்ந்து கடல் சீற்றமாக இருப்பதால் கடற்கரைக்கு செல்ல வேண்டாம் என போலீசார் எச்சரித்துள்ளனர்.

இச்செய்திக்கு பிரதான அனுசரணை

Selva Zug Promotion

வீடியோ இங்கே

Subcribe Lanka4
Like Lanka4
Follow Lanka4
Follow Lanka4