ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம்

#India #SriLanka #Ranil wickremesinghe #Lanka4
Kanimoli
2 years ago
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம்

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க எதிர்வரும் 21ஆம் திகதி இந்தியாவுக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளார். இந்திய பிரதமர், வெளிவிவகார அமைச்சர், நீதி அமைச்சர் மற்றும் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் ஆகியோருடன் ஜனாதிபதி தலைமையிலான இலங்கை குழுவினர் கலந்துரையாடவுள்ளனர்.

 இரு நாடுகளுக்கும் இடையிலான அரசியல். பொருளாதார, பாதுகாப்பு மற்றும் கலை, கலாசார உறவுகளை மேம்படுத்துவது தொடர்பில் இதன்போது கூடுதல் கவனம் செலுத்தப்படவுள்ளது. ஜனாதிபதியுடன் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் பொதுச்செயலாளரும், அமைச்சருமான ஜீவன் தொண்டமானும் பயணம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றன.

 இந்திய பிரதமருடனான சந்திப்பின்போது மலையகம் – 200 தொடர்பிலும் கலந்துரையாடப்படும் என எதிர்பார்க்கப்படுகின்றது. இலங்கையில் நடத்துவதற்கு திட்டமிடப்பட்டுள்ள மலையகம் – 200 நிகழ்வுக்கு இந்திய பிரதிநிதிகளை அழைப்பதற்கான கோரிக்கையும் விடுக்கப்படும் என தெரியவருகின்றது

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!