கஞ்சாவுடன் இராணுவ சிப்பாய் கைது
#SriLanka
Prathees
2 years ago
தனமல்வில அரம்பேகெம பிரதேசத்தில் 08 கிலோ 05 கிராம் உலர் கஞ்சாவுடன் சந்தேகநபர் ஒருவரை பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் கைது செய்துள்ளனர்.
பொலிஸ் விசேட அதிரடிப்படையின் புத்தல முகாமின் அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின் போதே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேக நபர் இராணுவ சிப்பாய் எனவும் விடுமுறையில் சென்றிருந்த வேளையில் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சந்தேக நபர் ஆரம்பகெம பிரதேசத்தை சேர்ந்தவர் என்பதுடன் அவர் வெல்லவாய நீதவான் நீதிமன்றில் ஆஜர்படுத்தப்படவுள்ளார்.