வரக்காப்பொல வாகன விபத்தில் கைது செய்யப்பட்ட சாரதி விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்
#SriLanka
#Police
#Court Order
#Accident
#Lanka4
Kanimoli
2 years ago
வரக்காப்பொல – துல்ஹிரிய பகுதியில் இடம்பெற்ற வாகன விபத்தில்ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட டிப்பர் சாரதி எதிர்வரும் 23ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.
முச்சக்கர வண்டியொன்றும் டிப்பர் வண்டியொன்றும் மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
விபத்தில் 40 வயதான தந்தை, 39 வயதான தாய் மற்றும் 13 வயதான மகன் ஆகியோரே உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.