இன்று முச்சக்கர வண்டியும் டிப்பர் வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் 3 பேர் உயிரிழந்துள்ளனர்.
#SriLanka
#Death
#Accident
#three-wheeler
#Lanka4
#இலங்கை
#விபத்து
#லங்கா4
Mugunthan Mugunthan
2 years ago
கொழும்பு - குருநாகல் வீதியில் துல்ஹிரிய என்ற இடத்தில் இன்று அதிகாலை முச்சக்கர வண்டியும் டிப்பர் ரக வாகனமும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் உயிரிழந்துள்ளனர்.
காலியில் இடம்பெற்ற இறுதிச் சடங்கில் கலந்து கொண்டு வீடு திரும்பும் வேளையில் இடம்பெற்ற இந்த அனர்த்தத்தில் தந்தை (40), தாய் (39) மற்றும் அவர்களது மகன் (13) ஆகியோர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
விபத்து தொடர்பில் டிப்பர் வண்டியின் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார்.