மக்களுக்கு வரிச்சலுகையை வழங்குவது குறித்து ஆலோசனை!
#SriLanka
Mayoorikka
2 years ago
மக்களுக்கு வரிச்சலுகையை எவ்வாறு வழங்குவது என்பது குறித்து அரசாங்கம் தற்போது கலந்துரையாடி வருவதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சர் பிரசன்ன ரணதுங்க தெரிவித்தார்.
தொழிலதிபர்கள் தமது இலாபத்தை வைத்து மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கு உழைக்க வேண்டுமெனவும், அதற்காக தற்போதுள்ள நடைமுறை சிக்கல்களை தீர்க்க அரசாங்கம் செயற்பட்டு வருவதாகவும் அமைச்சர் கூறினார்.
கட்டுநாயக்க, பண்டாரநாயக்க விமான நிலையப் புறப்படும் முனையத்தில் விமானப் பயணிகள் மற்றும் விசேட அதிதிகளுக்கான So Ceylon லாபி வசதி மற்றும் உணவக வளாகத்தை திறந்து வைக்கும் நிகழ்வில் ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விகளுக்கு பதிலளிக்கும் போதே அமைச்சர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.