காலி- தல்பே கடலில் இடம்பெற்ற சோகச் சம்பவம்
#SriLanka
#Death
#Student
#Lanka4
#sri lanka tamil news
Prathees
2 years ago
காலி, ஹபராதுவ, தல்பே கடலில் நீராடச் சென்ற 6 மாணவர்கள் அலையில் சிக்கி அடித்துச் செல்லப்பட்டனர்.
இச்சம்பவம் இன்று (10) பிற்பகல் இடம்பெற்றுள்ளது.
5 மாணவர்களை உள்ளூர்வாசிகள் மற்றும் பொலிசார் மீட்டனர் மற்றும் ஒரு மாணவர் காணவில்லை.
நீரில் மூழ்கி காணாமல் போன மாணவன் குருநாகல் பொடுஹெர பகுதியைச் சேர்ந்த 16 வயதுடையவர்.
குருநாகல் பகுதியில் பிரத்தியேக வகுப்பு ஒன்றின் ஏற்பாட்டில் சுற்றுலாவிற்கு வந்திருந்த மாணவர்கள் குழுவொன்று தல்பே கடற்கரையில் இதே சம்பவத்தை எதிர்கொண்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.