நிபந்தனைகளை மீறி செயற்படும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

#SriLanka #Fuel
Mayoorikka
2 years ago
நிபந்தனைகளை மீறி செயற்படும் எரிபொருள் நிலையங்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை!

இலங்கை பெற்றோலிய கூட்டுத்தாபனத்தின் நிபந்தனைகளை மீறி குறைந்தபட்ச எரிபொருள் இருப்புக்களை பேணாத எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எதிராக பல சட்ட நடவடிக்கைகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்தார்.

 பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தினால் நடத்தப்படும் 1050 எரிபொருள் நிரப்பு நிலையங்களில் கடந்த வாரம் 432 மட்டுமே அனைத்துப் பொருட்களுக்கும் குறைந்தபட்ச இருப்பு வைத்திருந்ததாகவும், 255 விற்பனை முகவர்கள் எந்தவொரு தயாரிப்புக்கும் குறைந்தபட்ச இருப்பை பராமரிக்கத் தவறியதாகவும் அமைச்சர் கூறினார்.

 363 டீலர்கள் ஒரு தயாரிப்புக்கு மட்டுமே குறைந்தபட்ச இருப்பு வைத்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டதாகக் கூறிய அமைச்சர், ஒப்பந்த விதிமுறைகளை மீறும் டீலர்கள் மீது தேவையான சட்ட நடவடிக்கை எடுக்க சிபெட்கோவுக்கு அறிவுறுத்தினார்.

 கடந்த 31ஆம் திகதி முதல் எரிபொருள் விலை திருத்தம் செய்யப்பட்ட பின்னர், எரிபொருள் நிரப்பு நிலையங்கள் குறைந்தபட்ச இருப்புக்களை பராமரிக்காத காரணத்தினால் இம்மாத ஆரம்பத்தில் சில நாட்களுக்கு நாடு முழுவதும் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்பட்டது.

உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!
உள்ளூராட்சி தேர்தலை விரைவில் நடத்துமாறு உத்தரவு!