இயற்கை நீதிக்கு முரணான விசாரணை! சர்வதேச விசாரணையை கோருகின்றோம்:கஜேந்திரகுமார்
#SriLanka
#Court Order
#Kilinochchi
#Gajendrakumar Ponnambalam
Mayoorikka
2 years ago
குற்றம் சுமத்தப்பட்ட ஒரு தரப்பேதம்மை தாமே விசாரிப்பது என்பதும் குற்றம் சுமத்தப்பட்ட அதே தரப்பே எதிராளியாக உள்ள என்னை விசாரிப்பது என்பதும் இயற்கை நீதிக்கு முரணானது” என பிணையில் விடுதலை செய்யப்பட்ட தமிழ்தேசிய மக்கள் முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தெரிவித்துள்ளார்.
குற்றம் சுமத்தப்பட்ட தரப்பே தம்மை தாமே விசாரித்து நீதி வழங்குவது எவ்வளவு முரணானது என நிதர்சனமாகியுள்ளது.
எம்மீது இழைக்கப்பட்டுள்ள இனப்படுகொலை விசாரணை விடயத்திலும் இந்த முரணையே நாம் சுட்டிக்காட்டி சர்வதேச விசாரணையை கோருகிறோம்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.