கஜேந்திரகுமார் விவகாரம்: விசாரணைக்காக அழைக்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர்கள்
#SriLanka
#Human Rights
#Human activities
Mayoorikka
2 years ago
பிராளுமன்ற உறுப்பினர் கஜேந்திரகுமார் பொன்னம்பலம் தொடர்பான சம்பவம் தொடர்பில் வாக்குமூலம் வழங்குவதற்காக சம்பவத்துடன் தொடர்புடைய பொலிஸ் உத்தியோகத்தர்கள் அழைக்கப்பட்டுள்ளதாக இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலய இணைப்பாளர் த. கனகராஜ் தெரிவித்துள்ளார்.
பாராளுமன்ற உறுப்பினர் பொன்னம்பலம் கஜேந்திரகுமாரினால் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவின் யாழ்ப்பாண காரியாலயத்தில் முறைப்பாடு செய்யப்பட்ட நிலையிலேயே இவர்கள் வாக்குமூலத்திற்காக அழைக்கபப்ட்டுள்ளனர்.